சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு – நடிகை ஜெயலட்சுமி
பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்தார். பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, “என்னுடைய சினேகம் அறக்கட்டளை தொடர்பாக கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதோடு மட்டுமல்லாமல் என்னை…