“என் மனக் குமுறலை நீதிமன்றத்தில் சொல்வேன்”-சௌந்தர்யாவின் அப்பா
காதல் திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தனது மனைவியை இன்று ஆஜர்படுத்துவதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தனித் தொகுதி எம்.எல்.ஏ பிரபுவுக்கும், தியாகதுருகத்தைச் சேர்ந்த அர்ச்சகர் சுவாமிநாதனின் மகள் சௌந்தர்யாவுக்கும் கடந்த திங்களன்று திருமணம் நடைபெற்றது. தனது மகளை ஏமாற்றி கடத்திச் சென்றுவிட்டதாக சௌந்தர்யாவின் தந்தை குற்றம் சாட்டினார். நான் சௌந்தர்யாவை கடத்தவில்லை காதலித்துதான் மணம் முடித்தேன் என்று எம்எல்ஏ…