அஜித்தின் ‘வலிமை’ படத்துடன் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் தியேட்டர்களில் மோதுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட ‘வலிமை’ படக்குழுவினர் தற்போது ரஷ்யா சென்று படப்பிடிப்பை முடித்தனர். அங்கு பைக் சாகச காட்சிகளும் படமாக்கப்பட்டன. ‘வலிமை’ வரும் பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது என்று போனிகபூர் தெரிவித்துள்ளார்.

image

இந்த நிலையில், ‘வலிமை’ படத்துடன் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகிறது தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு ‘பீஸ்ட்’ தான் வெளியாகிறது என்று முன்பு தகவல்கள் வெளியாகின. தற்போதுவரை ’பீஸ்ட்’ 60 சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்திருக்கிறது. ஆனால், ’எதற்கும் துணிந்தவன்’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் கடந்தவாரமே தொடங்கிவிட்டது. இதனால், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிடவும், ‘பீஸ்ட்’ படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடவும் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.