ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்துடன் தன்னுடைய வலிமை படத்தை வெளியிட வேண்டாம் என அஜித் கூறியுள்ளார். இதன் காரணமாகவே வலிமை படத்தின் வெளியீடு பொங்கலுக்கு தள்ளிச் சென்றுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்குமார், எச்.வினோத், போனி கபூர் இணைந்த படம் வலிமை. இதற்கான படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. வலிமை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அதை பாதித்தது. இந்த நிலையில் இரண்டு ஊரடங்குகளைக் கடந்து வலிமை படக்குழு படப்பிடிப்பை முடித்தது.
இதையடுத்து வலிமை படத்தின் வெளியீடு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் வலிமை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார். இந்தப் படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டார், ஆனால் அந்த தேதியில் வெளியிட வேண்டாமென அஜித் வலியுறுத்தியுள்ளார்.
அஜித்தின் இந்த முடிவிற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என கூறப்படுகிறது. முதல் காரணம் அதே தேதியில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே, 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. இதனால் இருவரின் ரசிகர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் சாடிக்கொண்டனர். இதனால் உச்சத்தில் உள்ள நடிகரை ரசிகர்கள் விமர்சனம் செய்வதை அஜித் விரும்பபில்லை. இரண்டாவது அந்தப் படத்தை அஜித்தின் நண்பர் சிவா இயக்கியுள்ளார். இந்த இரண்டு காரணங்களாலே வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டாம் என்று உறுதியாக கூறியுள்ளார்.
அஜித் குமார் இவ்வாறு கூறியதால் ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகைகளில் வெளியிட தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தி வந்தார். அதில் இறுதியாக அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் இருப்பதால் ரசிகர்களை திருப்திபடுத்த படத்தின் Glimlse, டீசர், டிரைலர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
– செந்தில் ராஜா
இதனைப்படிக்க…‘வலிமை’ படத்துடன் மோதும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’?