புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திரையரங்குகளில் காட்சிகளை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையின் எதிரொலியாக, தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் திரையரங்குகளை திறக்கலாமா, காட்சிகளின் நேரங்களை மாற்றி அமைக்கலாமா அல்லது மூடலமா என்பது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இன்று காலை 11 மணி அளவில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

image

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திரையரங்குகளில் தொடர்ந்து படத்தை திரையிட முடிவு நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், திரையரங்குகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் புதிய படங்களின் வெளியீட்டு தள்ளிச் சென்றது. இதனால் திரையரங்குகள் மூடப்படுமா என்ற குழப்ப நிலை நீடித்து வந்தது. அந்தக்குழப்பத்திற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.