தோல்மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையால் முகம் வீங்கியதாக நடிகை ரைசா வில்சன் குற்றம் சாட்டிய விவகாரத்தில், ரைசா தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக தோல் மருத்துவர் கூறியுள்ளார். 

தோல்மருத்துவர் பைரவி செந்தில் அளித்த விளக்கம்   

ரைசாவின் குற்றசாட்டிற்கு பதிலளித்துள்ள மருத்துவர் பைரவி செந்தில், “ இருப்பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது. இதே, சிகிச்சையை ஏற்கனவே ஒரு முறை ரைசா எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது அதே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையால் ஒருவாரத்திற்கு முகம் வீக்கமாகவே இருக்கும். ஆனால், ரைசா முகம் வீங்கியதால் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். ” என்றார்.

image

விளக்கம் அளிக்க மறுப்பு 

இந்த விவகாரம் குறித்து கேட்க ரைசாவை தொடர்பு கொண்டபோது , தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லாததால், விளக்கம் அளிக்க முடியாது என தெரிவித்தார். 

image

முன்னதாக, விளம்பரத் துறையில் மாடலாக இருந்து, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்தவர் நடிகை ரைசா வில்சன். அதன்பிறகு, “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றியடைந்ததால், அடுத்தடுத்த வாய்ப்புகளும் ரைசாவிற்கு கிடைத்தன. அந்தவகையில், காதலிக்க யாருமில்லை, தி சேஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துவருகிறார்.

திரைப்படத்தில் நடித்துக் கொண்டே மாடலிங் துறையிலும் பிசியாக வலம் வரும் ரைசா, தன் அழகை பராமரிப்பதிலும் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் பரமாரிப்பு மருத்துவமனையில், ஃபேசியல் செய்வதற்காக சென்றிருக்கிறார் ரைசா. அங்கு, மருத்துவர் பைரவி செந்திலிடம், ஃபேசியல் செய்ய சொன்னதாகவும், அவர் தனக்கு வேண்டாத சில சிகிச்சைகளை அளித்ததால், தனது முகம் வீங்கியிருப்பதாகவும் புகைப்படத்துடன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், அந்த மருத்துவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, மருத்துவர் பைரவி தன்னிடம் பேச மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.