டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள்களுக்கு முன்பு மதுபானக் கொள்ளை ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவர் இப்போது அமலாக்கப்பிரிவின் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

டெல்லியில் தொழில் அதிபர் மனைவியிடம் மோசடி செய்து ரூ.200 கோடி வசூலித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக கூறி பணம் வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று சுகேஷ் சந்திரசேகர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவத்தற்காக அழைத்து வரப்பட்டார். அவர் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுகையில், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ”அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவருடன் சேர்ந்தவர்களுக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன். கெஜ்ரிவாலை நீதியின் முன் நிச்சயம் கொண்டு வருவேன். கெஜ்ரிவாலுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் கொடுக்கப்படும். அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறைக்கு வரவேற்கிறேன்”என்றார்.

இதற்கிடையே டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தின் அனைத்து வழிகளையும் போலீஸார் பூட்டி விட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் அதிஷி கூறுகையில், ”கட்சி அலுவலகத்தின் அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டால் மக்களவைத் தேர்தல் நேரத்தில் எப்படி கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முடியும். போலீஸாரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.