தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். முன்னதாக கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ்-ஐ பார்த்த அவரது ஆதரவாளர்கள் வருங்கால மத்திய அமைச்சரே என முழக்கமிட்டு வரவேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “இந்தத் தேர்தலை தொண்டர்கள் சந்தித்தால் பல சோதனைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார ரீதியாகவும், பின்னர் அதில் இருந்து அவர்கள் மீண்டு வரமுடியாது. அதனால் நானே களம் இறங்கியுளேன். தேனி மக்களவைத் தொகுதியில் 1999-ம் ஆண்டு டிடிவி தினகரன் பேட்டியிட்டு வெற்றி பெற்றார். தேனி தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்.
குறிப்பாக பலருக்கும் தாராளமாக உதவி செய்துள்ளார். சில காலம் டிடிவி தினகரன் ஒதுங்கி இருந்தார் இருப்பினும் அவருக்கு தேனி தொகுதி மீது தனி கவனம் உண்டு. இப்போதும் அவருக்கு தேனியில் நன்மதிப்பு உண்டு. அவர் இங்கு போட்டியிட வேண்டும் என்று நானும் என் மகன்களும் கேட்டுக்கொண்டோம். அதனாலேயே டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் இங்கு போட்டியிட வேண்டும் என்பதாலே நான் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
டிடிவி தினகரன் தேனியில் போட்டியிட உள்ளார். அவரை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை. பாரத பிரதமர் பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். உலக நாடுகளில் அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தலைவர்களும் தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் என தெரிவித்தனர். அதனப்படையில் தேர்தலில் நானே போட்டியிடுகிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY