பொறுப்பு துணைநிலை ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் நியமனம்!

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்து வந்த தமிழிசை நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் சி.பி ராதாகிருஷ்ணன், புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்ற குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவித்திருக்கிறார்.

நாளை வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல் & தேர்தல் அறிக்கை!

அண்ணா அறிவாலயம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண உள்ளது.

இந்த நிலையில், நாளை காலை தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை மற்றும் 21 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட உள்ளார்.

பாஜக – பாமக கூட்டணி ஒப்பந்தம்!

தமிழகத்தில் பாமக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தைலாபுரத்தில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், `தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர பாஜக கூட்டணி அமைத்துள்ளோம். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார்’ என தெரிவித்தார். பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தைலாபுரத்தில் அண்ணாமலை,எல்.முருகன்!

அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை

தமிழகத்தில் பாமக தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் இரு கட்சிகள் இடையே இப்போது கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது. சேலத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பாமக-வும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது” – பிரதமர் மோடி

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கிறார். நேற்று கோவையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை.

பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.” என பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.