ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு எதிராக நடிகர் துல்கர் சல்மான், கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிரேசிலில் பிறந்த ஸ்பானிய பெண்ணான ஹியானா, அவரின் கணவர் ஜான் இருவரும் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இந்தியா வந்த அந்த தம்பதியினர், கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அவர்களை கொடூரமாகத் தாக்கி, அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

துல்கர் சல்மான்

இது தொடர்பாக அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் துல்கர் சல்மான், “இதைக் கேள்விப்பட்டதும் நொறுங்கி விட்டேன். நீங்கள் இருவரும் கோட்டயத்திற்கு வந்தபோது, அங்குள்ள என் நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு விருந்தளித்திருந்தனர். இதுபோன்ற சம்பவம் எங்கும் யாருக்கும் நடக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.