தஞ்சாவூரில் ஓ.பி.எஸ் அணியினரின், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், “தொண்டனுக்கு மரியாதை கொடுத்தவர் அண்ணா. தொண்டனின் உணர்வை மதித்து எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கிய போது தொண்டன் தான் இந்த இயக்கத்தின் தலைவனாக வர வேண்டும், தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கினார். எதை மாற்றினாலும் இந்த விதியை மாற்றக்கூடாது என்றார்.
அந்த வழியில் ஜெயலலிதா என்னை அமைச்சராக ஆக்கினார். ஓ.பன்னீர்செல்வத்தை இரண்டு முறை முதலமைச்சராக ஆக்கினார். மூன்றாவது முறையாக சசிகலா முதலமைச்சராக ஆக்கினார். அதை சசிகலா கேட்டவுடன் திருப்பி கொடுத்த ஓ.பன்னீசெல்வம் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறார். அண்ணா, எம்.ஜி.ஆரை அடையாளம் காட்டினார். ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்தை அடையாளம் காட்டினார். நயவஞ்சகத்தால், சூழ்ச்சியால், சந்தர்ப்பத்தால் தன்னுடைய பணப்பலத்தால் இன்றைக்கு பொதுச் செயலாளர் என பட்டம் சூட்டிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க, அ.தி.மு.க வரலாறு கூட தெரியாது.
திராவிடம், ஆரியம் என்றால் என்னவென்று தெரியாது. இது தான் வேதனை, காலத்தின் கொடுமை. இதை எதிர்க்க கூடிய துணிச்சல் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ்ஸுக்கு மட்டும் தான் உண்டு. தொண்டனின் உரிமையை மீட்க, அ.தி.மு.கவை கட்டிக் காக்க எப்போது ஒன்றிணைவீர்கள் என தமிழகம் முழுவதும் கேட்கின்றனர். அப்படி ஒன்றிணைந்தால் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை ஜெயிக்கும் என்கிறார்கள்.
இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமிக்கு புரிகிறதா, புரியவில்லை என்பது தெரியவில்லை. புரியவில்லை என்றால் தொண்டர்கள் ஒன்று கூடி எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்து விட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்று பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்… வெகு சீக்கிரத்தில் நடக்கும். ஒரத்தநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, துரோகம் செய்தவர்கள் ஒரத்தநாட்டில் இருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரை எட்டி நின்று கூட பார்த்ததில்லை. யாரோ சொல்லியதால் ஜெயலிதா உங்களுக்கு பதவி வழங்கினார்.
அவர் எங்களை துரோகி என்று சொல்கிறார். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆகியோருக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தின் மொத்த உருவமான அவருக்கு துரோகத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. தேர்தல் கூட்டணிக்கு குழு அமைத்திருக்கிறார். கூட்டணி பேசுவதற்கு யாரும் வராத போது எதற்கு இந்த அமைப்பு… உனக்கு வெட்கமாக இல்லை.
அ.தி.மு.க ஒன்றுபடுவதற்கு எடப்பாடி பழனிசாமி தடையாக இருந்தால், அவரை தூக்கி எறிந்து விட்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சியில் அமர வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி போன்ற இடையர்களை தூக்கி எறிந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியை காப்போம் அதற்கு தொண்டர்கள் துணை இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது. நான்கரை வருடம் துணையிருந்த பா.ஜ.க-வுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்வார். துரோகியை ஒழித்து அ.தி.மு.கவை காப்பாற்றுவோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY