சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், தனக்கு அறிமுகமான சுரேஷ், ஸ்ரீதர் ஆகிய இருவரும் சீனாவிலிருந்து 100 கோடி ரூபாய் நிலக்கரி ஆர்டர் கிடைத்திருப்பதாக கூறி 3 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன்அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை மோசடி ஆவண குற்றப்பிரிவு 1-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கூடுதல் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் நிஷா மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல் பாண்டி அறிவுரையின்படி உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் மணிவண்ணன் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் அண்ணாநகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கடந்த 10-ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஸ்ரீதரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சுரேஷ்

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “மணிவண்ணனிடம் 3 கோடி ரூபாய் கொடுத்தால் இரண்டு மடங்கு லாபம் தருவதாக ஆசைவார்த்தைகளை சுரேஷ் கூறியிருக்கிறார். அதை நம்பிய மணிகண்டன், 2,97,00,000 ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் மணிவண்ணன் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் சுரேஷ் ஏமாற்றி வந்திருக்கிறார். மணிவண்ணன் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் சுரேசைக் கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களைத் தேடிவருகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.