உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2023-ஐ புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதில் 7.13 லட்சம் கோடியோடு முகேஷ் அம்பானி முதலிடத்திலும், 5.17 லட்சம் கோடியோடு கெளதம் அதானி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Jindal Steel and Power

அதனை தொடர்ந்து ஷபூர் மிஸ்ட்ரி, ஷிவ் நடார், அசிம் பிரேம்ஜி, சைரஸ் பூனவல்லா, திலீப் ஷங்வி, சாவித்ரி ஜிண்டால், லட்சுமி மிட்டல், ராதாகிஷன் தமானி ஆகியோர் தொடர்ச்சியாக மூன்று முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர்.

அறிவிக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண்ணாக இடம்பிடித்துள்ளார், சாவித்ரி ஜிண்டால். ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருக்கும் சாவித்ரி 1.55 லட்சம் கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பைப் பெற்று இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

ஜிண்டால் குழுமம் இந்தியாவின் முக்கிய எஃகு உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. அதோடு மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சிமென்ட் மற்றும் ஜவுளி போன்ற பல துறைகளிலும் தனது செயல்பாட்டை இந்தக் குழுமம் விரிவாக்கியுள்ளது.

சாவித்ரி ஜிண்டால்

தற்போது 73 வயதாகும் சாவித்ரி ஜிண்டால் அசாமில் பிறந்தவர். ஜிண்டால் நிறுவனத்தை நிறுவிய ஓம் பிரகாஷ் ஜிண்டாலை 1970-களில் சாவித்ரி மணந்து கொண்டார்.  ஓம் பிரகாஷ் ஜிண்டால் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின்னர் அந்தக் குழுமத்தின் தலைவரானார் சாவித்ரி ஜிண்டால். தொழில் ஈடுபாட்டைத் தாண்டி அரசியலிலும் முனைப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். 

ஏற்கெனவே சாவித்ரி ஜிண்டால், 2016-ல் வெளியிடப்பட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 16-வது இடத்தை பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.       

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.