பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள பஹுவாரா கிராமத்தில் வியாழக்கிழமை திருமண விழா ஒன்று நடந்திருக்கிறது. அதில் கலந்துக்கொண்டவர்கள் ஆடப் பாடல் என கொண்டாடியிருக்கிறார்கள். அதில் 18 வயதான பிரசாந்த் குமார் மற்றும் 20 வயதான பிரதீக் குமார் அகியோரும் இருந்திருக்கிறார்கள். அதில் 10 வயது சிறுமியும் அவரின் நண்பர்களும் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிரசாந்த் குமார் பிரதீக் குமார் இருவரும், சிறுமிகளை தங்களுடன் சேர்ந்து ஆடுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.
ஆனால், சிறுமியும், அவரின் நண்பர்களும் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை திருமண விழாவில் அவர்களுடன் நடனமாட மறுத்த சிறுமியை பழிவாங்க தீர்மானித்திருக்கிறார்கள். மறுநாள் காலை சிறுமி காலை கடன் கழிக்க வெளியே சென்ற போது, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சிறுமியின் வாயை மூடி தூக்கிச்சென்று, தனிமையான இடத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியிருக்கிறார்கள்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் குடும்பத்தினர் விரைந்து வந்து சிறுமியை காப்பாற்றினர். சிறுமி ஹாஜிபூர் சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுமியை தீ வைத்து எரித்த பிறகு, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.