ஜூனியர் என்.டி.ஆரின் ‘என்டிஆர்31’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படக்குழு, கமல்ஹாசனை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யஷ் நடிப்பில், கடந்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கே.ஜி.எஃப். 2’ படத்தின் மூலம் இந்திய திரையுலகை மிரள வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். சுமார் ஒன்றை மாதத்தில் 1300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ள ‘கே.ஜி.எஃப். 2’ படம், திரையரங்கில் இன்றளவும் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘கே.ஜி.எஃப். 2’ படத்தைத் தொடர்ந்து, தற்போது பிரபாஸ், சுருதிஹாசன் நடிப்பில் ‘சலார்’ படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆருடன், இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணி அமைத்துள்ளார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பும் வெளியானது. ‘என்.டி.ஆர்.31’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வெயிட்டான வில்லன் கதாபத்திரம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்துக்கு, மிகவும் அனுபவம் வாய்ந்த உலகநாயகன் கமல்ஹாசன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் மற்றும் படக்குழு நம்புகிறது.

image

இதனால் விரைவில் படக்குழு நடிகர் கமல்ஹாசனை அணுகலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை இந்தப் படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒத்துக்கொண்டால், ஜூனியர் என்.டி.ஆர். – கமல்ஹாசன் முதல்முறையாக இணையும் படமாக இந்தப் படம் அமையும். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஜூனியர் என்.டி.ஆரின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்குப் பிறகு, ‘என்.டி.ஆர்.31’ படம் பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.