நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேந்தவர் சூரி ஸ்டீஃபன் (54). மத போதகரான இவர், பலரது வீடுகளுக்குச் சென்று பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வந்தார். இந்த நிலையில், நீலகிரியைச் சேர்ந்த ஒருவரது வீட்டுக்கு பிரார்த்தனை செய்வதற்காகச் சென்றபோது, அந்த வீட்டில் தனிமையிலிருந்த சிறுமியிடம் சூரி ஸ்டீஃபன் தகாத முறையில் நடந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தச் சிறுமியின் தாயார் ஊட்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மதபோதகர் சூரி ஸ்டீஃபனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது. அதையடுத்து, மத போதகரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய காவலர் ஒருவர் ,“மதபோதகர் சூரிய மூர்த்தி என்கிற சூரி ஸ்டீஃபன் (54),13 வயது சிறுமியிடம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டுளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டுள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் தாயார் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாதிரியாரை கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். பிப்ரவரி 3-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்” என்றார்.
Also Read: சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – அம்மாவுடன் கைதான மகன்!