கன்னட இயக்குநர் பிரஷாந்த் ராஜுடன் இணைந்திருக்கிறார் நடிகர் சந்தானம்.

’வஞ்சகர் உலகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மனோஜ் பீதா இயக்கத்தில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தில் நடித்துவரும் சந்தானம் தனது அடுத்தப் படத்தை அறிவித்திருக்கிறார். ‘சந்தானம் 15’ படமாக உருவாகும் இப்படத்தினை கன்னட இயக்குநர் பிரஷாந்த் ராஜ் இயக்குகிறார். இதனை சந்தானமும் இயக்குநர் பிரஷாந்த் ராஜும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புன்னகைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுத் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தனது முதல் படமான ‘லவ் குரு’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது, கர்நாடக அரசின் மாநில விருதுகளை வென்றுள்ள இயக்குநர் பிஷாந்த் ராஜ் பெரும்பாலும் நகைச்சுவைத் திரைப்படங்களையே இயக்கியுள்ளார்.

image

தற்போது, முதன்முறையாக தமிழ், கன்னடத்தில் உருவாகும் தென்னிந்தியப் படத்தினை இயக்குகிறார். சந்தானம் நடிப்பில் விரைவில் ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.