இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல். இந்நிறுவனத்தின் நெட்வொர்க் சேவை தமிழ்நாட்டில் சென்னை உட்பட சில இடங்களில் முடங்கியது. அதனால் ஏர்டெல் பயனர்கள் இணைய இணைப்பு மற்றும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாத சிக்கலை எதிர்கொண்டனர். தற்போது இயல்பு நிலைக்கு ஏர்டெல் நிறுவனத்தின் சேவை இயங்கி வருகிறது.

image

இந்நிலையில், நெட்வொர்க் முடக்கத்திற்கான காரணம் என்ன என்ற விளக்கத்தை ஏர்டெல் தரப்பு மின்னஞ்சல் மூலமாக புதிய தலைமுறைக்கு விளக்கம் கொடுத்துள்ளது. 

“தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னையில் சில இடங்களில் ஏர்டெல் சேவை முடங்கி இருந்தது. தற்போது அதை சீர் செய்துவிட்டோம். இயல்பு நிலைக்கு நெட்வொர்க் சேவை மீண்டும் திரும்பியுள்ளது” என ஏர்டெல் செய்தி தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.