நேற்று 14,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்து புதிதாக 15,823 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 7,823 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,01,743 ஆக அதிகரித்துள்ளது.
 
அதேபோல், கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 226 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,51,189 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 22,844 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,42,901 ஆக உயர்ந்துள்ளது.
 
image
மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,07,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 96,43,79,212 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,63,845 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.