காஞ்சிபுரம் நெசவாளர்களை  மையமாகக் கொண்டு ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என ஹிப் ஹாப் தமிழா, ஆதி தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆதி, சிவகுமாரின் சபதம் திரைப்படத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை படமாக்கியுள்ளதாக கூறினார். மேலும் இந்த திரைப்படத்தில் ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், அவர்களுக்கு நிச்சயம் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த திரைப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கியுள்ளார்.  அதேபோல் சத்யஜோதி நிறுவனத்துடன் அவர் இணைந்து தயாரித்தும் உள்ளார். முதல்பாதி நகைச்சுவை இரண்டாம் பாதி சென்டிமெண்ட் என நகரும் இந்த திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவரும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டுமென தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதை சத்யஜோதி நிறுவனம் ஏற்றுக் கொண்டது எனவும் குறிப்பிட்டார். 

சிவகுமாரின் சபதம் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சத்யஜோதி தியாகராஜன், நாயகி மாதுரி, Prank Star ராகுல், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.