நாய் சேகர் என்ற தலைப்பில் நடிகர் வடிவேலு நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் சதீஷின் திரைப்படத்திற்கு அந்த பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் என்பவர் இயக்கத்தில் சதீஷ் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்தத் திரைப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைத்துள்ளனர். இதற்கான முறையான தலைப்பு பதிவு செய்து வைத்திருந்தனர். 

இந்த நிலையில், நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி ஆகும் படத்திற்கு நாய் சேகர் எனும் தலைப்பு வைத்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.  ஆனால், இந்த தலைப்பை அவர்களிடம் இல்லாத நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நாய் சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் சதீஷ் திரைப்படத்திற்கு அறிவித்துள்ளது.

இதனால் வடிவேல் நடிக்கும் திரைப்படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என வைக்கலாமா என படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாம் : ஆஷஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? இங்கிலாந்து அணியில் என்ன பிரச்னை? – ஓர் அலசல் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.