திருவள்ளூர் மாவட்ம், சோழவரம் அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர், சோழவரம் காவல் நிலையத்தில் 12.9.2021-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது “எனது மகள் துர்காவை நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கு 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தேன். எனது மகளின் மூத்த மகன் தனசேகரன் என்கிற சூர்யா (14). அவன், என்னோடு தங்கிப் படித்து வந்தான்.

கொலை

9.9.2019-ம் தேதி நான் வெளியில் சென்ற நேரத்தில் நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சூர்யாவை பைக்கில் அழைத்துச் சென்றதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் எனது மகள் துர்காவிடம் விவரத்தைக் கூறி சூர்யா குறித்து விசாரித்தேன். ஆனால் அவள் வரவில்லை என்று கூறினாள். அதனால் என்னுடைய பேரனை அழைத்துச் சென்ற சிறுவனிடம் விசாரித்தபோது அவன் முன்னுக்குப்பின் முரணான தகவலைத் தெரிவித்தான். எனவே பேரனைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் எஸ்.எஸ்.ஐ குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சோழவரம் போலீஸார் கூறுகையில், “கோவிந்தசாமியின் புகாரின் பேரில் காணாமல் போன சிறுவன் சூர்யா குறித்து விசாரித்தோம். அவனை அழைத்துச் சென்ற சிறுவனிடம் விசாரித்தபோது நெடுவரம்பாக்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர்தான் சூர்யாவை அழைத்து வரக் கூறிய தகவல் கிடைத்தது. அதனால் கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோதுதான் சூர்யா கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. அவனைக் கொலை செய்து, சோழவரம் அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள திருப்பாலீஸ்வரர் கோயில் குளத்தில் வீசியத் தகவலும் தெரிந்தது.

கைது

Also Read: “சர்ச் வாசலில் தலை; ஏரிக்கரையில் உடல்” சட்டக்கல்லூரி மாணவன் கொலை!

அதனால் அங்கு சென்று சிறுவன் சூர்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோது, இன்னும் ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. துர்காவுக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சூர்யா இடையூறாக இருந்ததால்தான் அவனை தாத்தா வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்திருக்கிறார் துர்கா. மேலும் இவர்களின் பழக்கத்தை தட்டிக்கேட்டதால் அவனைக் கொலை செய்து கோயில் குளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து துர்கா, கோபாலகிருஷ்ணனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.