ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் வரும் ஞாயிறு அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாக உள்ளது. இதில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வரும் திங்கள் அன்று கொல்கத்தா அணியுடன் விளையாட உள்ளது. 


இந்நிலையில், RCB அணி அந்தப் போட்டியில் நீல நிறத்திலான புதிய ஜெர்ஸியில் களம் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சிகப்பு நிறத்திலான ஜெர்ஸியில் அந்த அணி விளையாடும். அவ்வபோது பச்சை நிற ஜெர்ஸியிலும் விளையாடும். இது சூழல் பாதுகாப்பு குறித்த அவசியத்தை உணர்த்தும் ‘GO GREEN’-க்கு ஆதரவாக இந்த ஏற்பாடு. தற்போது மூன்றாவதாக நீல நிற ஜெர்ஸி. 

ஏன் இந்த புதிய நிறம்?

கொரோனா காலத்தில் தங்களது உயிரை பணையம் வைத்து பணியாற்றிய முன்கள பணியாளர்களின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் இந்த ஏற்பாடு என RCB தெரிவித்துள்ளது. அவர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு கவச உடையின் (PPE Kit) நிறம் நீலம் என்பதால் அதே நிறத்தில் புதிய ஜெர்ஸியாம். 


அந்த அணியின் கேப்டன் விராட் கோலியும் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிக்கலாம் : “நீண்ட யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்தேன்” – டி20 கேப்டன் பொறுப்பை துறந்த கோலி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.