விஜய் சேதுபதி நடித்துள்ள அனாபெல் சேதுபதி திரைப்படம் ஃபேண்டசி காமெடி வகையில் எடுக்கப்பட்டுள்ளது என இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரை சுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பேசிய அவர் நான் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனரானேன். ஆனால், என் மகனிடம் நீ முறையாக தொழிலை கற்றுக்கொண்டு இயக்குனராக வேண்டும் என்று கூறினேன் என தெரிவித்தார். அவ்வாறு இயக்குனர் ஏ.எல்.விஜயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் தற்போது அனபெல் சேதுபதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, டாப்சி, யோகி பாபு தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஃபேண்டசி காமெடி வகையில் உருவாகியுள்ளது என தீபக் கூறியுள்ளார். அதேபோல் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அனபெல் சேதுபதி திரைப்படம் ரசிகர்களை கவரும் என தீபக் சுந்தர்ராஜன் நம்பிக்கையுடன் உள்ளார். மேலும் அனபெல் சேதுபதி பட நிறுவனத்தின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளதாக தீபக் சுந்தர்ராஜன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள்