மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கம் சுப்பிரமணி தெருவைச் சேர்ந்த 43 வயதாகும் தங்கதுரைக்கும், செங்கல்பட்டை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், தங்கதுரைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு அதிகரித்தது.

அப்போது, ’தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக’ கூறி தனது உறவினர்களுக்கு ஜெயலட்சுமி எஸ்.எம்.எஸ் மற்றும் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்துவிட்டு நேற்று முன்தினம் ஜெயலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்துபோன ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஜெயலட்சுமியின் உறவினர் கணேசன் என்பவர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் தங்கதுரையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வேறு ஒரு பெண்களுடன் தொடர்பு இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. அதன், அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜெயலட்சுமி பேசி பதிவு செய்துள்ள ஆடியோ பதிவில், “எனது கணவர் தங்கதுரைக்கு ஐந்து பெண்களுடன் பழக்கம் உள்ளது. அந்தப் பெண்கள் மசாஜ் மற்றும் விபச்சாரம் செய்து தனது செலவுக்கு பணம் தருவார்கள் என்றும், “உன்னால் எனக்கு செலவும் மட்டும் தான்,” என்றும் அதனால், “நீ செத்துப் போய்விடலாம்” என்று கூறினார்” என்று இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து துணை நடிகர் தங்கதுரையை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். விசாரணை செய்து முடித்து 23-வது சைதாப்பேட்டை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.