மனிதத்தடம் அற்ற இயற்கையின் மடியில் தங்கள் போக்கில் அனுபவிக்கும் பறவைகள்

கொரோனா பெருந்தொற்று ஒருபுறம் உலகையே அச்சுறுத்தி முடக்கிவிட்டிருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மனிதர்கள் நடமாட்டம் குறைந்திருப்பதால் பறவைகள் தங்கள் போக்கில் இயல்பாக அனைத்து இடங்களிலும் பறந்து திரிகின்றன. அதிலும் சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழிலுடன் பறவைகளின் சுதந்திர சிறகடிப்பு காட்சிகள் காண்போரை கவர்கின்றன.

உதகை தாவரவியல் பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை, லேம்ஸ் ராக் உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளிலும் வழக்கத்தைவிட அதிக அளவில் பலவித பறவைகளை காண முடிகிறது. மனித நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்ட பகுதியில் இயற்கையை தன்போக்கில் அனுபவிக்கின்றன இந்த பறவைகள். இதைப்பார்க்கும்போது தோன்றுவது ஒன்றுதான். இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.