மறைந்த நடிகரும், டாக்டருமான சேதுராமன் தொடர்பாக, அவரின் மனைவி பகிர்ந்த பதிவு ஒன்று பலரையும் கலங்கவைத்துள்ளது.

‘லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் சர்ப்ரைஸ்’ என்று ‘தியா’ படத்தில் ஒரு வசனம் வரும். புகழ்பெற்ற வசனமும்கூட. சொல்லப்போனால் அப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை. உண்மையில் நாம் நினைக்காத, எதிர்பார்க்காத பல விஷயங்களை அடுக்கடுக்காக அடுக்கிவிடுகிறது. அப்படியாக நடந்த ஒன்றுதான் டாக்டர் சேதுராமனின் இறப்பும். யாரும் எதிர்பார்க்காத நிலையில், கடந்த ஆண்டு திடீரென `சேதுராமன் இறந்துவிட்டார்’ என்ற செய்தி பரவுகிறது.

இதைப் பார்த்த பலருக்கும் நம்ப முடியவில்லை. வதந்தி என்று தங்களை ஆற்றுபடுத்திக்கொண்டனர். பின்னர் செய்தி உறுதிப்படுத்தியவுடன் `நல்லாதானே இருந்தாரு’ என்று திகைத்துப்போனார்கள்.

நடிகர் சந்தானத்துடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் சேதுராமன். இப்படத்தை அடுத்து ‘வாலிப ராஜா’, ‘சக்க போடு போடு ராஜா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார்.

நடிப்பு மட்டுமல்ல; அவருக்கு முதன்மையான தொழில் மருத்துவம்தான். பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான அவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தார். கடந்த வருடம் மார்ச் மாதம்தான் நடந்த இந்த துக்க நிகழ்வு கடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், அவரது மனைவி உமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சேதுராமன் குறித்து பதிவிட்டிருப்பது பலரையும் கலங்கச் செய்துள்ளது.

image

“மா… அப்படிதான் நான் எப்போதும் உங்களை அன்பாக அழைத்திருக்கிறேன். இதுவரை உங்களை ஒருபோதும் பெயர் சொல்லி அழைக்கவில்லை. எதிர்பார்ப்பில்லாமல் நீங்கள் இருப்பதற்காக நான் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன். என்னைச் சுற்றி இருந்தது, நீங்கள் மட்டுமே. மீட்டிங், பயணங்கள், தினசரி நோயாளி அட்டவணை, பயிற்சி அமர்வுகள், உணவு, ஓய்வு என 4 ஆண்டுகளில் நான் எப்போதும் உங்களுக்கே முன்னுரிமை அளித்தேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவற்றைச் செய்ய எனக்கு தெரிந்த சிறிய வழிகளில் உதவினேன்.

நீங்கள் கனவு கண்டதற்கு நான் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்கு நான் ஒருபோதும் மறுத்தில்லை. ஒரு வருடம் கடந்து விட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நீங்கள் நம் வீட்டு கதவை தட்டி என்னை அழைப்பீர்கள் என்று நான் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறேன். சாத்தியமாகுமா? நீங்கள் எங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிடவில்லை. எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.