ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென குடிசை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. எனினும், அதிர்ஷ்டவசமாக மூன்று குழந்தைகள் உள்பட நால்வர் உயிர் தப்பினர்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்ரம்பாக்கம் பல்லவன் நகரை சேர்ந்தவர் சிவமுருகன் (47). மாற்றுத் திறனாளியான இவர், தனது மனைவி தேவி (38) மற்றும் மூன்று குழந்தைகள் மற்றும் தனது தாயாருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

image

இந்நிலையில், இன்று வழக்கம் போல் சிவமுருகனும் அவரது மனைவி தேவியும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மூன்று குழந்தைகளும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். பாட்டி வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் உள்ளே டிவி பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் கூச்சலிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்த பாட்டியும் வீட்டை விட்டு வெகுதூரத்தில் வந்துள்ளனர். அப்பொழுது குடிசை வீடு முழுவதும் மளமளவென எரிந்து நாசமானது.

image

அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், வீடு தீப்பிடித்து எரிந்த போது குழந்தைகளும் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சோமங்கலம் காவல்துறையினர், மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்ததா அல்லது வேறு யாரேனும் காரணமா என்று பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.