கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கும் ‘சிம்பு 47’ படத்தின் தலைப்பை தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய் பாடல்கள் ஹிட் அடித்தன. சிம்பு, த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்தது. அதனைத்தொடந்து சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள்.

இந்நிலையில், மீண்டும் சிம்பு-கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

image

இந்நிலையில், இன்று இயக்குநர் கெளதம் மேனன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டைட்டில் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அழகான தமிழ் பெயர் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

image

இந்த மூவர் கூட்டணியில் உருவான பாடல்கள் இப்போதும் பலரின் காலர் டியூனாய் ஒலிக்கிறது. இரண்டு படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளர். தற்போது, இந்தக் கூட்டணியுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.