ராஜ்யசபா சீட் யார் கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சியில் சேர்ந்து விடுவேன் என சந்தானம் கிண்டலாக கூறியுள்ளார்.
இந்த வாரம் திரைக்கு வரும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய சந்தானம், இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், உதயநிதியுடன் இணைந்து நடித்ததுபோல் அரசியலிலும் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு கிண்டலாக பதிலளித்தார்.