‘கர்ணன்’ படத்தின் டப்பிங் நிறைவடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இயக்குநர் மாரி செல்வராஜு இயக்கி வருகிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.
படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக்கொடுத்துள்ளார் தனுஷ். இதனை படக்குழு உற்சாகமுடன் அறிவித்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் படத்தையும் அவர் ஷேர் செய்து, ‘விரைவில் கர்ணனின் குரலை கேட்பீர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் படம் பார்ப்பதற்கே மிகவும் எமோஷனாக ஆக்ரோஷமான காட்சியின் பின்னணியில் இடம்பெற்றதாக தெரிகிறது. அத்துடன், யானை மற்றும் வாள் ஒன்றி சிம்பிளையும் பதிவிட்டுள்ளார். அதுவும் படம் தொடர்புடையதாகவே தெரிகிறது.
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”><a href=”https://twitter.com/hashtag/karnan?src=hash&ref_src=twsrc%5Etfw”>#karnan</a> dubbing completed. You WILL hear his voice ? ? <a href=”https://t.co/T2Vkz32bky”>pic.twitter.com/T2Vkz32bky</a></p>— Dhanush (@dhanushkraja) <a href=”https://twitter.com/dhanushkraja/status/1359170096233664512?ref_src=twsrc%5Etfw”>February 9, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>