நடிகை சித்ராவின் நடத்தையில் அவரது கணவர் ஹேம்நாத் சந்தேகம் அடைந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹேம்நாத்தின் 10 ஆண்டு கால நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சித்ரா தற்கொலை செய்துகொண்டதற்கான காயம் ஏதும் கழுத்தில் இல்லை என சித்ராவின் பெற்றோர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கசெய்யவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜாமீன்மனுவில் இடையீட்டு மனுதாரராக ஹேம்நாத்தின் நண்பர் சையது ரோஹித்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.