பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சற்று உடல்நிலை குறைபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ராஹரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய நான்கு ஆண்டு சிறை தண்டனை வருகிற 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. பெங்களூரு சிறையில் இருந்து 27ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

உடனடியாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் வெளியே இருந்து மருத்துவ குழுவினர் சென்று பரிசோதித்து வருவதாகவும், கவலைப்படும் படியாக பாதிப்பு ஏதுமில்லை எனவும் சிறை மருத்துவர்கள் தரப்பில் கூறியிருக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.