கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கான ‘முப்தி’ படத்தில் நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்க இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கனகவேல் ராஜா கூறியுள்ளார்.

கன்னடத் திரையுலகில் நடிகர்கள் சிவராஜ் குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘முப்தி’. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் இயக்குநர் நார்தன். கன்னடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் கனகவேல் ராஜா வாங்கியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து தமிழிலும் அப்படத்தை இயக்குநர் நார்தன் இயக்க, சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் நடந்துக் கொண்டிருந்தது. இதனிடையே சிலம்பரசன் சரிவர படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுக்கிறார் எனக் கூறி தயாரிப்பாளர் கனகவேல் ராஜா நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து அப்படம் கைவிடப்பட்டது.

image

இந்நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பானது மீண்டும் தொடங்க இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கனகவேல் ராஜா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். 

அதில் அவர் கூறும்போது “ கொரோனாத் தொற்றுப் பரவலால், படப்பிடிப்பு தொடர்பான தேதிகளை நாங்கள் மாற்றிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இயக்குநர் நார்தனும் மற்றொரு படத்தின் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். நாங்கள் இணைந்து படப்பிடிப்பை தொடங்குவதற்கான சரியான சூழ்நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம். ஆனால் அது முடியாமல் போய்க்கொண்டே இருந்தது.

image

ஆகையால்தான் இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணாவை வைத்து இயக்க முடிவு செய்துள்ளோம். தற்போது சிலம்பரசன் ’மாநாடு படத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் அப்படத்தின் வேலைகள் முடிந்த பின்னர்  ‘முப்தி’  படத்தின் படப்பிடிப்பில் சிலம்பரசன் நடிப்பார்” என்று கூறியுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.