விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் தனக்கு விஜய் கொடுத்த சட்டை குறித்து நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்கிறது. அந்த நட்பே விஜய்யின் சந்திரலேகா, நிலாவே வா, புதிய கீதை, பத்ரி உள்ளிட்டப் படங்களில் சஞ்சீவை நடிக்கவும் வைத்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம்தான் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றார். மாநாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் மூச்சுவிடாத அடுக்கடுக்கான தமிழ் அனைவரையும் ரசிக்க வைத்தது. விஜய் எப்படி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறாரோ, அதேபோலவே சஞ்சீவும் சின்னத்திரையில் முன்னணி நடிகராக இருக்கிறார். 

image

(கல்லூரியில் படிக்கும்போது விஜய்யுடன் சஞ்சீவ்) 

தற்போது கண்மணி சீரியலில் நடித்து வருபவர் , மாஸ்டர் படத்திலும் விஜய் நண்பராக நடித்து மாஸ் காட்டியுள்ளார். 

image

விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்பதால், அடிக்கடி அவருடனான அன்பை அனைவரிடமும் பகிர்ந்துகொள்வார். சமீபத்தில் விஜய்யும் அவரும் வீடியோ சாட்டில் பேசியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப்போட்டிருந்தார். அதோடு, கொரோனா அறிகுறிகள் இருந்ததால் விஜய்யே பேரன்போடு உணவு எடுத்து வந்து கொடுத்ததை நெகிழ்ந்துபோய் பர்கிந்துகொண்டார்.

image

 

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மாதிரியே கருநீல நிற சட்டை அணிந்திருக்கும் சஞ்சீவ் “இந்த சட்டை தொடர்பாக நிறையப் பதிவுகளைப்  பார்த்தேன். ஆமாம், இது ஒரே மாதிரியான சட்டைதான். வேலாயுதம் படத்தில் நடித்தபோது நண்பன் விஜய் எனக்கு கொடுத்தது. 8 ஆண்டுகள் கழித்தும் இந்தச் சட்டை எனக்கு ஃபிட்டாக உள்ளது. நண்பேண்டா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு நட்பை போற்றியுள்ளார்.

இந்தப் பதிவிற்கு இதுவரை 26 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.