இறக்குமதி செய்யப்படும் டிஸ்பிளேகளுக்கு அரசு 10 சதவீத வரி விதித்திருப்பதன் காரணமாக மொபைல்போன்களின் விலை உயரும் என்று ஐசிஇஏ அறிவித்துள்ளது.
மொபைல்போன்களுக்கான டிஸ்பிளேக்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 10 சதவீத வரி விதித்துள்ளதால், மொபைல் போன் விலை சுமார் 3 சதவீதம் உயரும் என்று தொழில்துறை அமைப்பு ஐசிஇஏ தெரிவித்துள்ளது. “இந்த வரிவிதிப்பு காரணமாக மொபைல் போன்கள் விலையில் 1.5 முதல் 3 சதவீதம் வரை உயர்வு இருக்கும்” என்று இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) தலைவர் பங்கஜ் மோஹிண்ரு தெரிவித்துள்ளார். ஐசிஇஏ உறுப்பினர்களில் ஆப்பிள், ஹவாய், சியோமி, விவோ மற்றும் வின்ஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
இந்த வரிவிதிப்பின் நோக்கம் உள்நாட்டில் செல்போன் டிஸ்பிளேக்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைப்பதற்குமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.