ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார்பாளைத்தை சேர்ந்த அசோக் அந்தப் பகுதியில் செயல்படும் தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். அதே வங்கியில் பணியாற்றிய நைனாம் பாளையத்தை சேர்ந்த சௌந்திரநாயகி என்ற பெண்ணைக் காதலித்து கடந்த மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு குடும்பத்தினர் எதிர்ப்புக் காரணமாக மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் இரு வீட்டாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

image

அப்போது மணமகன் வீட்டார் மட்டும் வந்துள்ளனர். பெண் வீட்டார் காவல் நிலையம் வாராத காரணத்தினால் மணமகனின் பெற்றோர்களுடன் பேசி மணமக்களை காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பெண்ணின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக் கூறி பெண் வீட்டு உறவினர்கள் அழைத்துள்ளனர். அதனை உண்மை என்று நம்பி, அசோக், சௌந்திரநாயகி, அசோக்கின் சகோதரர் பரணிதரன் மற்றும் நண்பரான சூர்யா ஆகிய நான்குபேரும் மணமகள் வீடான நைனாம்பாளைத்திற்கு ஒரு காரில் சென்றுள்ளனர்.

image

அப்போது பெண்ணை வீட்டினுள் அழைத்து உறவினர்கள் சிறைபிடித்தனர். அசோக், பரணிதரன், சூர்யா ஆகிய மூன்று பேரையும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுசேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அரிவாள், கிரிக்கெட் பேட், கம்பு, கட்டை போன்ற பொருட்களைக் கொண்டு அடித்து உதைத்து தாக்கியதுடன் கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் வந்த காரையும் சேதப்படுத்தியுள்ளனர்.

image

அங்கிருந்து தப்பிவந்த மூன்று பேரும் கோபிச்செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனது மனைவியான சௌந்திரநாயகியை மீட்டுத்தரவேண்டும் என்று அசோக் போலீஸாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியை தாக்கிய பெண் வீட்டாரின் உறவினர்கள் செயலால் நைனாம்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கோபிச்செட்டிபாளையம்  காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

உறவுக்காரர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இடத்தில் மகனை பறிகொடுத்த தந்தை..! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.