தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்கள் அடிக்க வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை நிர்வாகி சுதாகர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர், மதுரை, இராமநாதபுரம், கோவை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்போ இல்லை என்றால் எப்பவும் இல்லை என போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.
இந்த நிலையில் தலைமை நிர்வாகி சுதாகர், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தொலைபேசி வாயிலாக தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்களை அடிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.