கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலகத்தை பாதி இடித்தது மற்றும் ரியாவை துன்புறுத்தி கைது செய்தது இரண்டுக்கும் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக திரைப்பட இயக்குநர் ரீமா காக்டி கூறியுள்ளார்.
அக்ஷய் குமார் நடிப்பில் ‘கோல்டு’ மற்றும், அமீர்கானின் ‘தலாஷ்’ ஆகிய படங்களை இயக்கியவர் ரீமா காக்டி. மேலும் கடந்த் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் அடித்த ‘கல்லி பாய்’ படம் மற்றும் ’மேட் இன் ஹெவன்’ வெப் சீரிஸ் ஆகியவற்றுக்கு திரைக்கதையும் எழுதியிருந்தார்.
சட்டவிரோதம் எனக்கூறி தனது மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதி மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்ட புகைப்படத்தை கங்கனா ரனாவத் வெளியிட்டிருந்தார். அதில் மும்பை, பாகிஸ்தானிடம் மாட்டிய காஷ்மீர் போன்று உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்பு மும்பை உயர் நீதிமன்றத்தால் கட்டட இடிப்பு நிறுத்தப்பட்டது.
I condemn the demolition of Kangana’s office and I condemn the hounding and harassment of Rhea. Yes I can be against both these things.
— Reema Kagti (@kagtireema) September 10, 2020
கங்கனா, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் போன்று மும்பை உள்ளது என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல நடிகர்களும், தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்கியதற்காக கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தியா மிர்ஸா, ‘’கடந்த சில மாதங்களாக கங்கனா, தனிநபர்களை தாக்கி பேசியது மற்றும் இழிவு படுத்தியதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரை தாக்கியதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறேன்’’ என்று ட்வீட் செய்துள்ளார்.
அனுபம் கேர், ’’இதுமுற்றிலும் தவறு. மும்பையில் இருப்பதற்காக கங்கனாவின் வீட்டை இடிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று ட்வீட் செய்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக ரியா சக்ரவர்த்தி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டதற்கு இந்தி திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.