அம்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வேதாச்சலத்தின் மகன் ஹரி கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் வேதாச்சலம். இவரது மகன் ஹரி கிருஷ்ணன் இன்று காலை கொரட்டூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட ஹரி கிருஷ்ணனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கொரட்டூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – +91 44 2464 0050, +91 44 2464 0060)