நடிகை சமந்தா தனது வீட்டு மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது பாராட்டுக்களை குவித்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையான சமந்தா நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு, இந்தத் தம்பதிகள் ஆந்திராவில் வசித்து வருகிறார்கள். ஊரடங்கு பிறப்பித்ததால் நடிகர்கள் பல்வேறு சவால்களை முன்வைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட நடிகர் மகேஷ் பாபு வைத்த சேலஞ்சை நடிகர் விஜய் ஏற்றுக்கொண்டார். அதுபோலவே, நடிகை சமந்தாவும் தற்போது, தனது வீட்டு மாடியில் விவசாயம் செய்து காய்கறிகளை விளைவிப்பதாக வீடியோ வெளியிட்டவர், அந்த சவாலுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை அழைத்துள்ளார்.
அதில், தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டவர், இப்படி வளர்ப்பதன் மூலம் சில வாரங்களுக்கு ஒன்றாக தவறு செய்து கற்றுக்கொள்ளலாம். மண், பானை விதைகளை தேடிக்கண்டுபிடிப்போம்” என்றும் கூறியிருக்கிறார்.