பஞ்சாபில் 1.74 இலட்சம், 12-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அம்ரீந்தர்சிங் தொடங்கி வைத்தார்.
பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர்சிங் தனது தேர்தல் அறிக்கையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக அறிவித்திருந்தார். 92 கோடி ரூபாய் மதிப்புள்ள “பஞ்சாப் ஸ்மார்ட் கனெக்ட் ஸ்கீம்” மூலமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கும் திட்டத்தை நேற்று அம்ரீந்தர்சிங் தொடங்கிவைத்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் மூலமாக, மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க உதவியாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.