ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அண்மையில் டெல்லி சென்று பாஜக அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பினார். இதையடுத்து திமுக, அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ததோடு அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதிலளித்த கு.க.செல்வம், “தாங்கள் அனுப்பிய நோட்டீஸில் விவரங்கள் இல்லை. நான் என்ன பொய்யான தகவலை சொன்னேன். திமுக தொண்டர்கள் மற்ற கட்சித் தலைவர்களையோ, தொண்டர்களையோ சந்திக்க கூடாது என எங்கும் குறிப்பிடவில்லை.
கருணாநிதியை பாஜகவை சேர்ந்த மோடி நேரில் வந்து பார்த்தது அனைவருக்கு தெரியும். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது. என் மீதான குற்றச்சாட்டு நோட்டீஸை திமுக திரும்ப பெற வேண்டும். சட்டப்படி விசாரணை வைத்து நான் அறிக்கையில் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கு.க.செல்வம் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கு.க.செல்வம் கழக கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகைய்ல் செயல்பட்ட்டு வந்தாலும் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலுருந்தும் நிரந்தமாக நீக்கம் செய்யப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.