மதுரை மாவட்டத்தில் 7 வாரங்களுக்குப் பின் இன்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகள் கடந்த 7 வாரங்களாக செயல்படத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட மதுரை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள நெல்பேட்டை இறைச்சி சந்தை, கரிமேடு, தெற்கு வாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளும் காலை முதல் செயல்படத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதால் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அனைத்து பொது மக்களும் மாஸ்க் அணிந்து வந்தாலும் தனி மனித இடைவெளியை பின்பற்றமால் இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். இறைச்சி விலையை பொறுத்தவரை வழக்கமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.