சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியான ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் 48 மணிநேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
 
நடிகர் சிம்பு நடிப்பில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  இதில் சிம்புக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். இதனை கௌதம் மேனன் இயக்கி இருந்தார். இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் இந்தப் படத்தின் காதல் ஜோடியான கார்த்திக் மற்றும் ஜெசி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு மயக்கத்தைத் தக்க வைத்திருக்கிறது. 
 
image
 
இதனிடையே இரு நாட்கள் முன்பு இப்படத்தின் தொடர்ச்சியாகச் சிம்பு மற்றும் த்ரிஷாவை வைத்து ஊரடங்கு கால பொழுதுபோக்காக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.  மொத்தம் 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படத்தை 48 மணி நேரத்தில் நாற்பது லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. 
 
image
 
இது குறித்து விவரித்த கௌதம் வாசுதேவ் மேனன், “‘இதற்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துதான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால்,  மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கு இடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பு எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது” எனக் கூறியுள்ளார்.
 
image
 
மேலும் அது சரி இப்போதைக்குக் குறும்படம் என்ற அடைமொழி எதற்கு?  கார்த்திக், ஜெசியின் காதல் பயணத்தை மீண்டும் திரையில் எதிர்பார்க்கலாமா எனக் கேட்டபோது,  “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.