முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தரையில் உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
 
image
 
1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் அந்தப் படத்தை வென்ற இந்தியப் பெண் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு அவர் உலக அளவில் அறியப்படும் நட்சத்திரமாக மாறினார். அதனையடுத்து அவருக்கு தமிழ் திரைத்துறை உட்படப் பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் ‘ஜீன்ஸ்’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ உள்ளிட்ட பல பட வாய்ப்புகளைப் பெற்றார். தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் வரலாற்றுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். 
 
image
 
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில் உலக அழகியாக அவர் பட்டம் பெற்றவுடன் அந்த உடையுடன் தலையில் கிரீடத்தைத் தாங்கியபடி தரையில் உட்கார்ந்து இந்தியப் பாணியில் உணவை உண்கிறார். அவருடன் அவரது தாயாரும் உள்ளார். இப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அவ்வளவு எளிமையாக அவர் இருந்தது குறித்து அவரது ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். ஆகவே அது இப்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.