சென்னையில் மண்டலவாரியாக கொரொனா பாதிப்பு எண்ணிக்கை விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் நேற்று 332 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 74 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை 3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருவர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையைப் பொறுத்தவரை மண்டலவாரியாக கொரொனா பாதிப்பு எண்ணிக்கை விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் 973 பேரும், திருவிக நகரில் 750 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் ஒரு அரக்கன் – கோயில்களை திறக்க மோடியை வலியுறுத்தும் பூசாரிகள்