கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரும்பாக்கத்தைச் சேர்ந்த 44 வயது பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்

தமிழகத்தில் நேற்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.

image

இதில் சென்னையில் மட்டும் நேற்று 332 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 74 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை 3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

image

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரும்பாக்கத்தைச் சேர்ந்த 44 வயது பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். திருமுல்லைவாயிலைச் சேர்ந்த 60 வயது ஆணும் இன்று உயிரிழந்தனர். இதனை அடுத்து கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கில் கவனம் கொள்ள வேண்டிய 30 நகரங்கள்… தமிழகத்தில் மட்டும் 6!!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.