இரான் Vs இஸ்ரேல்: அதிகரிக்கிறதா மூன்றாம் உலகப் போர் அச்சம்?!
இஸ்ரேல் Vs பாலஸ்தீனம் என்றிருந்த போர்க் களம் தற்போது இஸ்ரேல் Vs இரான் ஆகவும் உக்கிரமடைந்திருக்கிறது. சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது இரான் வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதால், மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் மாபெரும் போர்மூளும் அபாயம் அதிகரித்திருக்கிறது. உலகப்போர் போல `இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது’ என ஐ.நா.வும்…