`டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது’ -எடப்பாடி

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று (ஏப்ரல் 16) வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியை திமுக விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு என்ன? பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.

ஏன் அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் இஷ்டம். எங்கள் கூட்டணியை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை, தகுதி இல்லை. எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை எல்லாம் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான், கூட்டணி ஆட்சி இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி” என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.” என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs